அன்புடன் ,
முக நூலிலேயே ( Face Book) எழுதிக்கொண்டு இருப்பதால் பிளாக்கில் எழுதுவது பெரும்பாலும் தடை ஏற்படுகிறது . வாரம் ஒரு முறையாவது இனி ப்ளோகில் எழுதவேண்டும். ஒவ்வொரு முறையும் இதை சொல்லிக்கொண்டும் , எழுதிக்கொண்டும் அல்லது நினைத்துக்கொண்டாவது இருப்பது ஒரு செயல் பாடாகிவிட்டது . அதே போலவேதான் படைப்புகள் எழுதுவதும். நேரம் இன்மை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கிடைக்கும் கொஞ்ச நேரமும் பெரும்பாலும் படிக்கவே சரியாகி விடுகிறது. சிலருக்கு மட்டும் படிப்பதும் , எழுதுவதும் எப்போதுமே பெரும் அல்லது ஒரு பிரச்சனையே இல்லாமல் இருக்கிறது . அவர்களிடம் இதைப்பற்றிக்கேட்டால் , அவர்கள் மிக எளிமையாக தினம் ஒரு பக்கமாவது எழுதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக சொல்லுகிறார்கள். சுலபமாகத்தான் இருக்கிறது. இந்த ஒரு பக்கம் எழுதுவது கூட எனக்கு சாத்தியப்படாமல் இருக்கிறது . தினம் ஒரு பக்கம் என்றாலே வாரம் ஒரு சிறுகதை , வருடம் 365 பக்கம் என்றாகி வருடத்துக்கு ஒரு நாவல் எழுதிவிடலாம். ஆஹா ......! இப்படியே நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே ......இன்னும் எத்தனை காலத்துக்கு என் முதல் நாவல் ...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக