திங்கள், 23 ஜனவரி, 2012

திருப்பூர் புத்தக கண்காட்சியில் வருகிற 31.01.2012 அன்று “உலகை குலுக்கிய புத்தகங்கள்” என்கிற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை உரை நிகழ்த்துகிறார். வாசிப்பின் அனுபவத்தை பெற, அவசியத்தை உணர அனைவரும் வாருங்கள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, திருப்பூர் புத்தக கண்காட்சி, இடம் டைமண்ட் தியேட்டர் எதிரில்.
நேற்று கோவையில் " காவல் கோட்டம்" நாவலுக்கு பாராட்டு விழா விஜயா பதிப்பகம் சார்பாக நடைபெற்றது . சிறப்பான விழா .ஆடம்பரம் இல்லாத எளிய விழா . தலைமை உரையில் கவிஞர் .புவியரசு சாஹித்ய அகாடமி விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை ஒரு பிடி பிடித்தார் . விருதுக்கு படைப்பு எப்படி தேர்வு செய்யப்படுகிறது என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவு படுத்தினார் . ரொம்ப நாள் சந்தேகம் தெளிவு பெற்றது..!

திருப்பூர் புத்தகக் கண்காட்சி, 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி, 2012