செவ்வாய், 24 ஏப்ரல், 2012


எப்போதும்
எங்கள்  முகத்தில்
காரி உமிழ்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்
எங்களின் கதறல்
உங்களின் காதுகளில் விழுவதேயில்லை 
நாங்கள் 
எதுவும் செய்ய இயலாமல்
வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்
மக்களை கொன்று  குவிக்கும்
அவர்கள்
அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பயங்கரவாதத்தை ஒழித்து விடுவதாக.....
அவர்கள் முகமூடி  அணிந்திருப்பது
தெரிந்தும்  அவர்களைத்தான்
நீங்கள் இன்னமும்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
உங்களின் கண்களுக்கு
அவர்களின் காலடியில் கிடக்கும்
மனித உடல்கள் மட்டும்
தெரிவதேயில்லை .....! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக