ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
***********
1.
கண்களை மூடி
தொழுகையில்
நிற்கும் போதெல்லாம்
பூதாகாரமாய்
எதிரே நிற்கிறது
சைத்தான் !
2.
ஆறறிவுள்ள மனிதன் நான்
என்னால் எதையும்
செய்ய முடியும்
இறுமாந்திருந்த நேரத்தில்
சட்டென நதி கடந்து
மலை மீது பறக்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி....
3.
எப்போதும்
அடைக்கப்பட்டிருக்கும்
வீடுகளுக்குள் கிடக்கிறது
குழந்தைகள் விளையாடும் தெரு
யாருடைய சிநேகமும் இன்றி
தொலைக்காட்சி பெட்டிகள் முன்
குழந்தைகள்
சிறைப் படுதப்பட்டிருக்க
குழந்தைகள் விளையாடாத தெருவில்
குடியிருக்கின்றன வீடுகள் .
4.
விளையாடிக் களித்து
குளித்து முடித்து
கரையேறிய பின்பும்
மிச்சமிருக்கிறது
உடல் முழுவதும்
கடல் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக