செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கவிதைகள்

எங்கள் வீடு
பக்கத்துக்கு  வீடுகளை விட  உயரமாய்
மேல் தளத்தில்  
ஆஸ்பெஸ்டாஸ்  ஓடு  வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம்  சேறும் சகதியும் கொண்ட  
செந்நீர் ஓடும்  வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி  
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய்  அமர்ந்து
இலக்கியம் பேச  திண்ணையுமாய்
சௌகரியமாய்தான்  இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.   
            **********
 2.
தினம்  தினம்
செல்ல மகனின்
ஓயாத நச்சரிப்பு
இந்த ஆண்டாவது
அதை
உபயோகப்படுத்தச் சொல்லி...
வாங்கியதிலிருந்து
சும்மாவே  கிடக்கிறது
பரண் மேல்
ட்ராலி சூட்கேஸ்
                ************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக